எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

ஜனவரி 10, 2012

சிறப்பாக நடந்து முடிந்த ஷார்ஜா மண்டலகூட்டம்

சிறப்பாக நடந்து முடிந்த ஷார்ஜா மண்டலகூட்டம்  
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06.01.2012 வெள்ளிகிழமை அன்று ஷார்ஜா  ரோலாவில் உள்ள அல் ரக்காயிஸ் தமிழ் ரெஸ்டாரென்ட் மாடியில், சேவை இலட்சியத்துடன் சீரிய நடை போட்டு சென்றுகொண்டிருக்கும் நமது  அமானின் ஷார்ஜா மண்டலகூட்டம் சிறப்பாக நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ். 

சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் கிராஅத்துடன் அமானின் தலைவர் தலைமையில் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்திற்கு ஷார்ஜாவில் வசிக்கும் நமதூர் சகோதரர்கள் கணிசமான  பேர் கலந்து கொண்டனர். அசர் தொழுகைக்கு பிறகு துவங்கிய இந்நிகழ்வில் ஷார்ஜா மண்டல செயலாளர் ஷர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. அதைதொடர்ந்து அமான் தலைவரின் சிறு உரையில், இந்த வருடம் அமான் சார்பாக தினசரி காலண்டர் அச்சடித்து ஊர் முழுவதும் இலவசமாக வழங்கியது குறித்தும், அதற்குண்டான செலவுகள் குறித்தும் விளக்கம் அளித்து விட்டு எதிர்வரும் 10.02.2012 அன்று நமது அமானின் ஐந்தாவது பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் துபாய் தேரா அல்முத்தீனா, அருகில் உள்ள துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரில்  நடக்க இருப்பதை அறிவிப்பு செய்தார்கள் . அதைதொடர்ந்து அமானின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் பனிஅப்தால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டுக்கான ஷார்ஜா மண்டல செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அமானின் தேர்தல் அதிகாரிகளான சகோதரர்கள் பனி அப்தால் மற்றும் ஷவ்கத் அலி அவர்கள் முன்னிலையில்,   தேர்தெடுக்கப்பட்டார்கள். மண்டல செயலாளர்களாக பட்டக்கால் தெரு ஹாஜா மெய்தீன் அவர்களும், பரக்கத் அலி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக மேலசெட்டிதெரு அமீருதீன், பட்டக்கால் தெரு முஹம்மது கௌது மற்றும் ரஹ்மானியா தெரு முஹம்மது யூசுப்தீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இக்கூட்டத்தில் பரக்கத் கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் அலியார் குரூப் நிறுவனத்தார் இணைந்து எதிர்வரும் அமானின் ஐந்தாவது பொதுக்குழுவிற்கு வருகை தரும் நமதூர் சகோதரர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்பளிப்பு வழங்குவதாக அறிவிப்பு செய்தார்கள். இறுதியாக அனீஸ்தீன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது . வந்திருந்த அனைவருக்கும் ஹோட்டலிலேயே சிற்றுண்டியும் தேநீர் விருந்தும் பரிமாறப்பட்டது. நமது அமான் சார்பாக  மாதம் ஒரு முறை ஒவ்வொரு மண்டலத்திலும் இது போன்ற ஒரு சந்திப்பை ஏற்படுத்தினால் நமதூர் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து கொள்ளும் வாய்ப்பும், நம்முடைய நல்ல பல எண்ணங்களும்  ஈடேறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இருக்காது என்பதை அன்று நம்மால் உணர முடிந்தது. 

களத்தொகுப்பு: அபுஒமர்