எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

அமான் செய்திகள்

அமான்பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்
பெருநாள் சந்திப்பு, அமானின் பொதுக்குழு 

 கடந்த 06.11.2011, ஹஜ்ஜுப்பெருநாள் அன்று அடியற்கை மக்கள் சங்கமித்த பெருநாள் சந்திப்பும், அமானின் அரையாண்டு பொதுக்குழுவும் துபையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்.. இந்த கூட்டத்தில் அமீரகத்தில் வாழும் அடியற்கை சகோதரர்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை 5:00 மணிக்கு  அமானின் கெளரவத்தலைவர் ஜனாப் ஏ.நூருல் அமீன் அவர்கள் தலைமையில், அமானின் பொருளாளர் சகோதரர் அமீருதீன் கிராஅத் ஒலியுடன் துவங்கியது. அமானின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து, சிறப்பு பேச்சாளாராக கலந்து கொண்ட சகோதரர் செய்யது அலி அவர்கள் தியாகத்திருநாளின் சிறப்பு பற்றி சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து மஃரிப் தொழுகைக்காக இடை வேளை விடப்பட்டது. சுமார் 20 நிமிடம் கழித்து மீண்டும் அமர்வ துவங்கியது. இரண்டாம் அமர்வின் துவக்கத்தில் அமானின் துணைப்பொதுச்செயலாளர் சகோதரர் அல் அமீன் அவர்கள் அமான் எஜுகேஷன் செண்டர் பற்றி உரை நிகழ்த்தினார்கள் அதை தொடர்ந்து அமானின் பைத்துல் மால் கமிட்டி உறுப்பினர் சகோதரர் அனீஸுதீன் அவர்கள் பைத்துல் நிலை பற்றி உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து அமானின் நிதிநிலை அறிக்கை அமானின் தணிக்கையாளர் சகோதரர் அபுபக்கர் அவர்கள் வாசித்தார்கள்.. அதைதொடர்ந்து அமானின் பொருளாளர் சகோதரர் அமீருதீன் அவர்கள் நமது அமானின் நமது ஊருக்காக மட்டுமே பயன்படக்கூடிய அமைப்பு, ஆதலால் நமதூர் மக்கள் பயன்படும் வகையில் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் சந்தா செலுத்தி வருமாறு விட்டு அமர்ந்தார்கள். இறுதியாக, அமானின் தலவர் சகோதரர் ஹாஜா முபாரக் அவர்கள் நன்றியுரை கூறி துஆ ஓதி நிறைவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இந்த சந்திப்பு நிகழ்ச்சி வந்திருந்த அனைவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது மட்டுமல்லாமல், அன்று பெருநாள் என்பதால் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு சந்தோஷமாக சென்றனர். 

களத்தொகுப்பு: அபூஒமர்                                                    புகைப்படங்கள்: ஹாஜாபாய்